பிரேசிலில் மரண ஓலங்களுக்கிடையே மீட்புப் பணிகள் தொடர்கின்றன

பிரேசிலில் மரண ஓலங்களுக்கிடையே மீட்புப் பணிகள் தொடர்கின்றன

1 mins read
5a39a3c8-a7a9-4c27-9b24-79482dc84f8c
மண்ணுக்குள் புதையுண்டு கிடப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படம்: ஏஎஃப்பி -

ரியோ டி ஜெனிரோ: கன­மழை கார­ண­மாக பிரே­சி­லில் நிலச்­ச­ரி­வு­களும் திடீர் வெள்­ள­மும் ஏற்­

பட்­டுள்­ளன.

இயற்­கை­யின் சீற்­றம் கார­ண­மாக பிரே­சி­லின் பெட்­ரோ­பொ­லிஸ் நக­ரில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 165ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­த­னர்.

நிலச்­ச­ரிவு ஏற்­பட்டு மண்­ணுக்­குள் புதையுண்டு கிடப்­போ­ரைத் தேடி மீட்­கும் பணி­கள் முடுக்­கி­

வி­டப்­பட்­டுள்­ளன.

மீட்­புப் பணி­யாளர்களுடன் சேர்ந்த தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­

க­ளைத் தேடும் பணி­யில் உற­

வி­னர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இயற்­கைப் பேரி­ட­ரால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள இடங்­கள் போர் நடந்து முடிந்த இடங்­க­ளைப் போல காட்­சி­ய­ளிப்­ப­தாக

பிரே­சி­லிய அதி­பர் ஜயிர் பொல்­சொ­னாரோ தெரி­வித்­தார்.

மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. மாண்­ட­வர்­களில் குறைந்­தது 28 பேர் சிறு­வர்­கள் என அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே, பிரே­சி­லின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் கன­மழை தொடர்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் கார­ண­மாக குறைந்­தது இரு­வர் மாண்­டு­விட்­ட­தாக பிரே­சி­லிய அவ­ச­ர­கா­லச் சேவை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சுவர் இடிந்­து ­வி­ழுந்­த­தில்

ஒரு­வர் உடல் நசுங்கி உயி­ரி­ழந்­தார். இன்­னொ­ரு­வர் வெள்­ளத்­தில் மூழ்கி மாண்­டார்.

கன­மழை கார­ண­மாக 1,200க்கும் மேற்­பட்­டோர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.

இயற்கைப் பேரிடர் காரணமாக கிட்­டத்­தட்ட 43 வீடு­கள் அழிந்து ­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.