மணிலா: பிலிப்பீன்ஸ் அதன் எல்லைகளைச் சில நாள்களுக்கு முன்பு திறந்தது. இதையடுத்து, 20,000க்கும் மேற்பட்ட வெளி
நாட்டுச் சுற்றுப்பயணிகள் அந்
நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
"இம்மாதம் 10ஆம் தேதியன்று நாங்கள் எல்லைகளைத் திறந்தபோது சுற்றுப்பயணிகள் பலர் வந்தனர். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது," என்று பிலிப்பீன்சின் சுற்றுப்பயணத் துறை செயலாளர் பெர்னடிட் புயாட் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் சென்றடைந்த
சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், தென்கொரியா ஆகிய நாடு
களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

