உக்ரேனில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அழைத்துவரும் நோக்கில், ஏர் இந்தியாவின் முதல் விமானம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) காலை அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றது.
200 இருக்கைகள் கொண்ட அவ்விமானம் இன்று நள்ளிரவு இந்தியத் தலைநகர் புதுடெல்லியை வந்தடையும் என்று சொல்லப்பட்டது. நாளை மறுநாளும் (பிப்ரவரி 24) வரும் 26ஆம் தேதியும் மேலும் இரு ஏர் இந்தியா விமானங்கள் உக்ரேன் செல்லும்.
உக்ரேனில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்கள் நலமாக இருப்பது முக்கியம் என்றும் ஐநா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இந்தியப் பேராளர் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார்.