ஹாங்காங்: ஹாங்காங்கில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருமிப் பரவல்
கட்டுக்கடங்காமல் போவதற்குள் அதைக் கட்டுப்படுத்த அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாடு தழுவிய கொவிட்-19 பரிசோதனை களை நடத்த ஹாங்காங் அதிகாரி கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்தப் பரிசோதனை ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும். ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மூன்று முறை பரிசோதனை நடத்தப்படும்.
வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து இறுதி வரை சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நடப்பில் இருக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட ஒன்பது நாடு
களிலிருந்து ஹாங்காங் வரும் ஒன்பது விமானச் சேவைகளுக்கான தடை ஏப்ரல் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் பலருக்கு கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தும் அணுகுமுறையை சீனா இதற்கு முன்பு அடிக்கடி கடைப்பிடித்துள்ளது. அதே அணுகு
முறையை ஹாங்காங்கும் பின்பற்ற இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி ஹாங்காங்கில் மேலும் 6,211 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
கொவிட்-19 காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 பேர் மாண்டுவிட்டதாகவும் 19 பேரின் உடல்நிலை கவலைக்
கிடமாக இருப்பதாகவும் ஹாங்காங் சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.
ஹாங்காங்கில் முடக்கநிலையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

