பெய்ஜிங்: சீனாவின் சில பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை மைய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
யூனான், குயீசோ, ஹுனான், ஜியாங்சி, ஆன்ஹுயி, சேஜியாங் ஆகிய இடங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
25 மில்லி மீட்டர் அளவு
வரையிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
சாலைகள், ரயில்பாதைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவை தொடர்பாக எவ்வித பாதிப்போ அசம்பாவிதமோ ஏற்படாதிருக்க தகுந்த முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பனிப்புயல் தொடர்பான எச்சரிக்கை, மிதமான நிலையில் இருந்தபோதிலும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றைத் தவிர்க்க சீன அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

