பிள்ளைகளுக்குத் தொற்று; பிரிவால் தவிக்கும் பெற்றோர்

பிள்ளைகளுக்குத் தொற்று; பிரிவால் தவிக்கும் பெற்றோர்

2 mins read
4a352dc6-6cd7-4753-be5c-3254f2d14742
பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட காத்திருக்கும் ஹாங்காங் பெற்றோர்கள். படம்: ஏஎஃப்பி -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட பிள்ளை­களுக்கு, பெற்­றோ­ரி­டம் இருந்து பிரிக்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வது பொது­மக்­க­ளின் கோபத்­தைத் தூண்­டி­யுள்­ளது.

இது கிரு­மிப் பர­வல் சூழ்­நி­லை­யைக் கையாள ஹாங்­காங் தயா­ராக இல்லை என்­ப­தைக் காட்­டு­வதா­க­வும் அவர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பெரு­ம­ள­வில் அதி­க­ரித்து வரு­வதால், ஹாங்­காங்­கின் மருத்­து­வ­மனை­களும் தனி­மைப்­ப­டுத்­தல் வச­தி­களும் நிரம்பி வழி­கின்­றன.

இந்­நி­லை­யில், தொற்றுக்கு ஆளான தங்­கள் பிள்ளை­களு­டன் மருத்­து­வ­ம­னை­களில் இருக்க முடி­ய­வில்லை என்று சில பெற்­றோர்­கள் புகார் கூறி­யுள்­ள­னர்.

பெற்­றோர்­க­ளின் இந்த புகார் சுகா­தார ஊழி­யர்­கள் உட்­பட பெரும்­பா­லா­னோ­ருக்கு அதிர்ச்­சியை ஏற்­படுத்­தி­யுள்­ளது.

"மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிள்­ளை­யு­டன் பெற்­றோர் ஒரு­வர் இருப்­ப­தற்­கான வச­தியை ஏற்­ப­டுத்தித் தரவேண்டும், இல்­லை­யென்­றால் அதனால் பிள்­ளை­யின் நிலைமை மோச­மா­கக்­கூ­டும்," என்று ஹாங்­காங் பல்­கலைக்­க­ழக மருத்­து­வர் சித்­தார்த் ஸ்ரீதர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"இது போன்ற சமயங்களில், பகுத்தறிவு, இரக்கத்துடன் இருப்பது முக்கியமானது," என்றும் அவர் சொன்னார்.

பெற்­றோ­ரைப் பிரிந்­தி­ருக்­கும் பிள்­ளை­கள் ஏழு நாள்­கள் வரை சிகிச்சை பெற வேண்­டி­யுள்ளதாக சில பெற்றோர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­க­ளால் ஏற்­பட்­டுள்ள தாக்­கத்­தை­யும் பாதிப்­பை­யும் தணிக்­கும் வகை­யில், சிறு வர்த்தகங்கள், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வரிச் சலு­கை­கள், மானி­யங்­களை அறி­வித்­துள்­ளது ஹாங்­காங். 2022-23ஆம் ஆண்­டிற்­கான வரவு­செ­ல­வுத் திட்­டத்தில் இவை அறிவிக்கப்பட்டன.

100 விழுக்­காடு சம்பள வரி­விலக்கு, 10,000 ஹாங்­காங் டாலர் மதிப்­பி­லான நுகர்வு பற்­றுச்­சீட்­டு­கள், வேலை­யில்­லா­த­வர்­க­ளுக்கு நிதி உதவி, நேர­டி­யா­கப் பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கங்­க­ளுக்கு மானி­யங்­கள் ஆகி­யவை இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

ஹாங்­காங்­கின் பொரு­ளா­தா­ரம் இந்த ஆண்டு 2.0 விழுக்­காட்­டில் இருந்து 3.5 விழுக்­காடு வரை வளர்ச்சி காணும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஹாங்­காங் நிதிச் செய­லர் பால் சான் சொன்­னார்.