பேங்காக்: வெளிநாட்டுப் பயணிகளுக்கான கொவிட்-19 பரிசோதனைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது தாய்லாந்து.
தற்போதைய நடைமுறையில், தாய்லாந்து சென்றடைந்த அன்றும் 5வது நாளும் பயணிகள் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுக்காக அவர்கள் அரசாங்க தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், அடுத்த மாதம் முதல், ஐந்தாவது நாளன்று பயணிகள் சுயமாக 'ஏஆர்டி' பரிசோதனை செய்து கொண்டால்போதும் என அந்நாட்டின் கொவிட்-19 சூழல் கண்காணிப்புக் குழு
கூறியுள்ளது.

