ஹாங்காங்கில் பெற்றோர் துணை இல்லாமல் தனிமைப்படுத்தப்படும் பச்சிளங் குழந்தைகள்

ஹாங்காங்கில் பெற்றோர் துணை இல்லாமல் தனிமைப்படுத்தப்படும் பச்சிளங் குழந்தைகள்

2 mins read
0f1f3a85-2597-4095-be34-362174e58393
குடியிருப்புப் பகுதியில் கிருமிப் பரவல் ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிக்கும் சிறுமியைத் தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று அறவே இல்­லாத நிலையை எட்ட ஹாங்­காங் இலக்கு கொண்­டுள்­ளது. ஆனால் அந்­நாட்­டில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தற்­போது மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோரை ஹாங்­காங் அதி­கா­ரி­கள் தனி­மைப்­ப­டுத்­து­கின்­ற­னர். தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வோ­ரு­டன் அவர்­க­ளது குடும்­பத்­தார் தொடர்­பில் இருக்க முடி­யாது. இந்த விதி­முறை பச்­சி­ளங் குழந்­தை­க­ளுக்­கும் சிறு­வர்­க­ளுக்­கும் பொருந்­தும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தங்­கள் பிள்­ளை­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அவர்

­க­ளைத் தங்­க­ளி­ட­மி­ருந்து அதி­கா­ரி­கள் பிரித்­து­வி­டு­வர் என்ற அச்­சம் ஹாங்­காங் மக்­களை உலுக்­கி­யுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 11 மாத குழந்­தையை அதி­கா­ரி­கள் தனி­மைப்­ப­டுத்­தி­னர். பெற்­றோர் இல்­லா­மல் அக்­கு­ழுந்தை தனி­யாக இருந்­தது. இந்த நிலை தங்­கள் பிள்­ளை­க­ளுக்­கும் ஏற்­படும் என்ற கவலை ஹாங்­காங்­கில் உள்ள பல பெற்­றோ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஹாங்காங்கில் கிருமித்தொற்று காரணமாக பல சிறுவர்கள் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் இன்னொரு 11 வயது குழந்தையும் அடங்கும்.

ஹாங்காங்கில் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரைத் தனி­மைப்­ப­டுத்­த­வும் சிகிச்சை அளிக்­க­வும் தேவைப்­படும் எட்டு தற்­கா­லிக நிலை­யங்­க­ளைக் கட்ட சீனா­வைச் சேர்ந்த கட்­டு­மான நிறு­வ­னத்­து­டன் ஹாங்­காங் ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.

தற்­கா­லிக நிலை­யங்­கள் மொத்­தம் 50,000 படுக்­கை­க­ளைக் கொண்­டி­ருக்­கும் என்­றும் ஹாங்­காங்­கெங்­கும் பல்­வேறு இடங்­களில் அவை கட்­டப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தத் தற்­கா­லிக நிலை­யங்­க­ளைக் தங்­க­ளுக்­குச் சொந்­த­மான காலி­யாக இருக்­கும் தனி­யார் நிலங்­களில் கட்­ட­லாம் என்று சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் ஹாங்­காங் அர­சாங்­கத்­தி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி ஹாங்­காங்­கில் மேலும் 8,798 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்த எண்­ணிக்கை கூடிய விரை­வில் 10,000ஐ எட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த மாதம் அன்­றாட பாதிப்பு 180,000ஆகப் பதி­வா­கக்­கூ­டும் என்று ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்­துள்­ள­னர்.