சுமத்ரா நில­ந­டுக்­கம்: ஆறு பேரைக் காண­வில்லை

சுமத்ரா நில­ந­டுக்­கம்: ஆறு பேரைக் காண­வில்லை

1 mins read
d1db7e8b-21e8-4b4e-be04-b5268f0112c7
-

சுமத்­ரா­வில் இரண்டு நாள்­களுக்கு முன்­னர் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தில் காணா­மல் போன ஆறு பேரை இந்­தோ­னீ­சிய மீட்­புப் பணி­யா­ளர்­கள் நேற்று தேடி வந்­த­னர்.

வெள்­ளிக்­கி­ழமை காலை உண்­டான அந்த நில­ந­டுக்­கத்­தில் குறைந்­தது எட்­டுப் பேர் மாண்­ட­னர்.

முத­லில் நில அதிர்வு ஏற்­பட்­ட­தா­க­வும் அதைத் தொடர்ந்து 6.2 ரிக்­டர் அளவிலான நில­ந­டுக்­கம் உண்­டா­ன­தா­க­வும் அமெ­ரிக்க நில­வி­யல் ஆய்வு அமைப்பு கூறி­யது.

நில­ந­டுக்­கத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான வீடு­கள், பள்­ளி­வா­சல்­கள், பள்­ளி­கள், வங்­கி­கள் உள்­ளிட்ட கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன.

காண­மால் போன ஆறு பேரும் நிலச்­ச­ரி­வில் புதை­யுண்­டி­ருக்­க­லாம் என்று இந்­தோ­னீ­சிய தேசிய பேரி­டர் மீட்­புப் பணி அமைப்­பின் பேச்­சா­ளர் நேற்று கூறி­னார்.

வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தில் 86 பேர் காய­முற்­ற­னர். அவர்­களில் 10 பேருக்குக் கடு­மை­யான காயங்கள் ஏற்­பட்­ட­தாக அமைப்பு கூறி­யது.

சுமத்­ரா­வின் பசா­மான், மேற்கு பசா­மான் நக­ரங்­களில் ஆறா­யி­ரத்­துக்­கும் மேற்பட்டோர் வீடு­களை விட்டு வெளி­யேறி, தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில் தஞ்­சம் புகுந்­த­னர். கன­ரக இயந்­தி­ரங்­க­ளைக் கொண்டு உயிர்­பி­ழைத்­தி­ருக்­கக் கூடி­ய­வர்­களை மீட்­புப் பணி­யா­ளர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.