ஜோகூர் மாநி­லத் தேர்­தல்: பன்­மு­னைப் போட்டி

ஜோகூர் மாநி­லத் தேர்­தல்: பன்­மு­னைப் போட்டி

1 mins read
8dd74ff4-b74a-4242-9cb3-29f1d4cf3cfa
-

ஜோகூர்: ஜோகூர் மாநி­லத் தேர்­த­லில் 56 தொகு­தி­க­ளி­லும் பன்­மு­னைப் போட்டி இடம்­பெ­ற­வுள்­ளது. சில இடங்­களில் ஏழு வேட்­பா­ளர்­கள் களம் இறங்­கி­யுள்­ள­னர். நேற்று காலை 10 மணிக்கு முடி­வ­டைந்த வேட்­பு­ம­னுத் தாக்­க­லில் 239 வேட்­பா­ளர்­க­ளின் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

அண்­மைய ஆண்­டு­களில் வேறு எந்த மாநி­லத் தேர்­த­லி­லும் இந்த அள­வுக்­குப் போட்டி இருந்­த­தில்லை.

முப்­பத்­தைந்து தொகு­தி­க­ளி­லும் நான்கு முனைப் போட்­டி­யும் எட்டு தொகு­தி­களில் ஐந்து முனைப் போட்­டி­யும் இடம்­பெ­று­கிறது என்று மலே­சிய தேர்­தல் ஆணை­யம் கூறி­யது.

நான்கு தொகு­தி­களில் ஆறு வேட்­பா­ளர்­களும் இரண்டு தொகு­தி­களில் ஏழு வேட்­பா­ளர்­களும் களம் இறங்­கி­யுள்­ள­னர்.

இளம் வாக்­கா­ளர்­க­ளைக் கவ­ரும் வண்­ணம், இரு­ப­துகளில் மதிக்க­தக்க வய­துள்ள பல வேட்­பா­ளர்­கள் இந்த முறை தேர்­த­லில் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். ஜோகூர் வாக்­கா­ளர்­களில் ஏறத்­தாழ பாதிப் பேர், அதா­வது சுமார் 2.6 மில்­லி­யன் பேர், 40 வய­துக்­குக் குறைந்­த­வர்­கள்.

மலே­சி­யப் பொதுத் தேர்­தல் இன்­னும் ஒன்­றரை ஆண்­டு­களில் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் அந்­நாட்டு அர­சி­யல் களம் சிதறி பல கட்­சி­கள் உரு­வெ­டுத்­தி­ருப்­பதை இது காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.