தென்கொரியாவில் தொற்று 200 விழுக்காடு அதிகரித்தது

தென்கொரியாவில் தொற்று 200 விழுக்காடு அதிகரித்தது

1 mins read
ebd4a109-a057-48a8-9dd3-f6efc6b08b0c
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக நேற்று ஒரே நாளில் இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு 112 பேர் மாண்­டு­போ­யி­னர்.

ஓமிக்­ரான் பர­வ­லால் மோச­மான கிரு­மிப் பர­வல் ‌சூழ­லைச் சமா­ளித்து வரும் நிலை­யில், கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் இருப்­ப­வர்­களின் எண்­ணிக்கை சென்ற வாரத்­தை­விட (408) , இந்த வாரம் (643) பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த சில நாள்­க­ளாக நாளொன்­றுக்கு அங்கு ஏறத்­தாழ 166,00 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன. சென்ற வாரம் புதன்­கி­ழ­மை­யன்று ஆக அதி­க­மாக 171,452 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

அங்கு சென்ற இரண்டு வாரங்­களில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை 200 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

50 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட தென்­கொ­ரி­யா­வில், அண்மைய நாள்களில் அமெ­ரிக்­கா­வை­விட அதி­க­மான தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன.

அமெ­ரிக்­கா­வில் நேற்று முன்­தி­னம் 25,210 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டன.