ஹாங்காங்: கிருமிப் பரவல் காலத்தில் ஹாங்காங் இதுவரை காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் நேற்று ஆக அதிகமாக பதிவாகின.
ஹாங்காங்கில் உள்ள மருத்துவ
மனைகள், பொதுப் பிணவறைகளில் சடலங்களை வைப்பதற்கான இடம் இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் நேற்று கூறினர்.
பிணவறைகளில் இடம் இல்லாத காரணத்தால், மருத்துவ மனைகளின் விபத்து, அவசர அறைகளிலேயே பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் டோனி லிங் கூறினார்.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக இச்சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கடுங்குளிர் நிலவும் நிலையில், கிருமித்தொற்று காரணமாக உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் பெருமளவு அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சென்ற வாரத்தில் கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்தனர். ஞாயிறன்று அங்கு ஆக அதிகமாக ஒரே நாளில் 83 பேர் மாண்டுவிட்ட
னர்.
இதற்கிடையே, ஹாங்காங் முழுவதும் நடத்தப்படவுள்ள கிருமித்தொற்று பரிசோதனையின்போது அந்நகரம் முற்றிலும் முடக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

