யங்கூன்: மியன்மார் படையினர் 85 பிள்ளைகள் உட்பட மேலும் சிலரை இரண்டு நாள்களுக்குப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக போராளிக் குழுவும் ராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக மறைமுக அரசாங்கமும் கூறின.
அவர்களில் ஐந்து வயதுப் பிள்ளைகளும் இருந்ததாக அவை கூறின. இது அனைத்துலகச் சட்ட மீறல் என்று அவை சாடின.
சண்டை காரணமாக, அப்பகுதி மக்கள் பலர் வெளியேறிவிட்டனர். ஆனால், 10 ஆசிரியர்களும் 85 பிள்ளைகளும் மடலாயம் ஒன்றில் சிக்கிக் கொண்டனதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மியன்மாரின் சாகாயிங் வட்டாரத்தில் நடந்த போராளிகளுடனான மோதலின்போது பிடிக்கப்பட்ட அவர்கள், நேற்று விடுவிக்கப்பட்டனர். பெரியவர்கள் சிலர் விடுவிக்கப்படவில்லை.

