பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கில் பெய்த கனமழை காரணமாக நேற்று அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்களின் ஒரு பகுதி வெள்ளநீரில் மூழ்கியதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன.
ஜாலான் புடு, ஜாலான் ஸ்ரீ பெமாய்சுரி, ஜாலான் துன் ரசாக், ஜாலான் பாகாங் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நகரின் மையப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை ஒன்று போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

