கொழும்பு: ஆசியாவின் மிகப் பெரிய யானையாகக் கருதப்படும் 69 வயதான 'நதுங்கமுவே ராஜா' நேற்று முன்தினம் உயிரிழந்தது.
தன் உறவினரை குணப்படுத்திய இலங்கை துறவிக்கு மைசூா் மகாராஜாவால் பரிசாக அளிக்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளில் 'நதுங்கமுவே ராஜா'வும் ஒன்று.இந்த யானையின் தந்தம் 10.5 அடி நீளமாகும்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்த யானை, காம்பஹா மாவட்டத்தில் உயிரிழந்தது. யானையின் மறைவுக்கு இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. யானையின் உடலைத் தேசிய சொத்தாக அறிவித்த அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபக்சே, வருங்கால சந்ததியினருக்காக யானையின் உடல் பாது காக்கப்படும் என்றும் சொன்னார்.