அகதிகளான 2.5 மில்லியன் உக்ரேனிய மக்கள்

அகதிகளான 2.5 மில்லியன் உக்ரேனிய மக்கள்

2 mins read
df7699fa-1876-4dd8-92f6-0c615b6a689d
உக்ரேனியர்கள் பலர் அண்டை நாடுகளுக்குத் தப்பியுள்ளனர்.படம்: இபிஏ -

ஜெனீவா: போர் தொடங்­கி­யதி

லிருந்து இது­வரை கிட்­டத்­தட்ட 2.5 மில்­லி­யன் உக்­ரே­னி­யர்­கள் சொந்த நாட்­டி­லி­ருந்து வெளி­யேறி அண்டை நாடு­களில் தஞ்­சம் அடைந்­துள்­ள­னர். மேலும் இரண்டு மில்­லி­யன் உக்­ரே­னி­யர்­கள் சொந்த நாட்­டி­லேயே இருப்­ப­தா­க­வும் ஆனால் அவர்­கள் தங்­கள் வீடு­களை இழந்து செய்­வ­த­றி­யாது தவித்து வரு­வ­தாகவும் ஐநா நேற்று கூறி­யது. தேவை­யில்­லாத போரால் பெருமளவிலான மக்­கள் கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தாக ஐநா­வின் அக­தி­கள் பிரி­வின்

தலை­வர் ஃபிலிப்போ கிரான்டி

அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ளார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து தற்­போ­தைய நில­வ­ரப்­படி உக்­ரே­னிய அக­தி­க­ளின் எண்­ணிக்கை 2.5 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

உக்­ரே­னில் இருந்த ஏறத்­தாழ 116,000 வெளி­நாட்­ட­வர்­களும் அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருப்­ப­தாக ஐநா தெரி­வித்­தது.

போர் தொடர்­வ­தால் உக்­ரே­னிய அக­தி­க­ளின் எண்­ணிக்கை கூடிய விரை­வில் ஏறத்­தாழ நான்கு

மில்­லி­ய­னாக அதி­க­ரிக்­கும் என்று ஐநா எதிர்­பார்க்­கிறது.

மூன்று வாரங்­க­ளி­லி­லேயே

அக­தி­க­ளின் எண்­ணிக்கை 2.5 மில்­லி­ய­னா­கப் பதி­வா­கி­யி­ருப்­ப­தால் நாள்­கள் செல்­லச் செல்ல உயிர் பிழைக்க சொந்த நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றும் உக்­ரே­னி­யர்­க­ளின் எண்­ணிக்கை நான்கு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக உயர்ந்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஏது­மில்லை என்று ஐநா தெரி­வித்­தது. இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு ஐரோப்­பி­யர்­கள் பலர் அக­தி­க­ளா­கி­யி­ருப்­பது இதுவே முதல்­முறை என்று ஐநா கவலை தெரி­வித்­தது.

உக்­ரே­னிய மக்­க­ளைப் பத்­தி­ர­மாக வெளி­யேற்­றுவோம்;

உறுதி அளித்த ரஷ்யா

இதற்­கி­டையே, கியவ், கார்­கிவ் போன்ற முக்­கிய உக்­ரே­னிய நக­ரங்­களில் இருக்­கும் ­மக்­களை அங்­கி­ருந்து பத்­தி­ர­மாக வெளி­யேற்­று­வோம் என்று ரஷ்ய ராணு­வம் தெரி­வித்­துள்­ளது. இதற்கு உக்­ரே­னின் சம்­ம­தத்­திற்­காக இனி காத்­தி­ருக்­கப்­போ­வ­தில்லை என்று அது கூறி­யது. உக்­ரே­னி­லி­ருந்து வெளி­யேறி ரஷ்­யா­வுக்­குச் செல்­லும் உக்­ரே­னியர்­

க­ளுக்கு முழு­மை­யான பாது­காப்பு வழங்­கப்­படும் என்று ரஷ்­யா­வின் தேசிய தற்­காப்பு நிர்­வாக மையத்­தின் தலை­வர் கர்­னல் ஜெனரல் மிக்காயில் மிசின்ட்செவ் கூறினார்.

உக்ரேனிய மக்களை நகரங்களிலிருந்து வெளியேற விடாமல் அந்நாட்டுப் போராளிகள் தடுத்து வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.