இயல்புநிலையை நெருங்கும் ஆஸ்திரேலியா

1 mins read
c2a6ace5-0620-426c-88f5-067846ffbe82
சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல 'போண்டாய்' கடற்கரை. ஆஸ்திரேலியா இயல்புநிலைக்குத் திரும்பத் தயாராகி வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அர­சி­யல் தலை­வர்­கள், கொவிட்-19ஐ சளிக்­காய்ச்­ச­லைப் போல் கருதி இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பும் எண்­ணம் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்­டுப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் கூறி­யுள்­ளார். எனி­னும், இதன் தொடர்­பில் சுகா­தார வல்­லு­நர்­க­ளி­டம் ஆலோ­சனை கேட்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கொள்­ளை­நோய்ப் பர­வல் செயற்­திட்­டத்­தின்­கீழ் கட்­டம் 'டி', கொவிட்-19 பரவலை சகித்­துக்­கொண்டு இயல்பு­நி­லைக்­குத் திரும்­பு­வ­தைக் குறிக்­கும். அந்­தக் கட்­டத்­திற்கு முன்­னே­று­வது குறித்து தமது மத்­திய, மாநி­லத் தலை­வர்­க­ளு­டன் கலந்து­பே­சி­ய­தா­கத் திரு மோரி­சன் செய்தி­யா­ளர்­க­ளி­டம் சொன்­னார்.

"நமது விமான நிலை­யங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன, அனைத்­து­ல­கப் பய­ணி­கள் இங்கு வருகை தர­மு­டி­யும், ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குத் திரும்­பி­வ­ரும் பய­ணி­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ர­வு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன, ஆகை­யால் இப்­போதே நாங்­கள் கட்­டம் 'டி'க்குள் காலடி எடுத்து வைத்­து­விட்­டோம் எனச் சொல்­ல­லாம்," என்று திரு மோரி­சன் குறிப்­பிட்­டார்.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரு­டன் நெருங்­கிய தொடர்புள்­ளவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப் படுத்­திக்­கொள்­ள­வேண்­டும். இந்த நிபந்­தனையை அகற்­று­வது குறித்து ஒரு வல்­லு­நர் குழு­வி­டம் ஆலோ­சனை கேட்­கப்­போவதாகவும் திரு மோரி­சன் தெரி­வித்­தார்.

இந்த நிபந்­த­னை­யால் வர்த்­த­கர்­க­ளுக்கு மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தை அவர் சுட்­டி­னார்.

"இப்­போதே நாங்­கள் கட்­டம் 'டி'யில் இருப்­ப­தா­கக் கரு­து­கி­றோம், ஆனால் சில விதி­வி­லக்­கு­கள் இருக்­கின்­றன. கட்­டம் 'டி' என்­பது இந்­தக் கிரு­மியை சளிக்­காய்ச்­ச­லைப் போல் கருதி வாழ்­வது என்­பதை நாம் கருத்­தில்­கொள்­ள­வேண்­டும்," என்று திரு மோரி­சன் கூறி­னார்.