இந்தியன்வெல்ஸ் டென்னிஸ்: வெளியேறினார் ஒசாகா

இந்தியன்வெல்ஸ் டென்னிஸ்: வெளியேறினார் ஒசாகா

1 mins read
7a342edc-4d17-418d-9f07-abcb8605f280
-

கலி­ஃபோர்­னியா: இந்­தி­யன்­வெல்­சில் டென்­னிஸ் போட்­டி­யில் வெரோ­னிகா குடெர்­மெ­டோ­வா­வி­டம் 6-0 6-4 என்ற கணக்­கில் தோற்று போட்­டி­யில் இருந்து வெளி­யே­றி­னார் ஜப்­பா­னின் நவோமி ஒசாகா.

முன்­னாள் முதல்­நிலை வீராங்­க­னை­யும் நான்கு முறை கிராண்ட் சிலாம் பட்­டம் வென்­ற­வ­ரு­மான ஒசாகா இப்­போட்­டி­யின் முதல் செட்­டில் தோற்ற பிறகு, ரசி­கர் ஒரு­வர் அவரை அவ­தூ­றாக பேசிக் காயப் படுத்தினார்.

இத­னால் மன­வே­தனை அடைந்த ஒசாகா, கண்­ணீர்­விட்டு அழு­தார். பிறகு அழு­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­திக் கொண்டு தொடர்ந்து விளை­யாடினார்.

ஆட்­டத்­திற்­குப் பிறகு பேசிய அவர், தனக்கு நடந்த இந்த சம்­ப­வம், 2001ல் வீனஸ், செரீனா வில்­லி­யம்­சிற்கு நடந்­ததை நினை­வூட்­டி­ய­தாக சொன்­னார்.

"இதற்கு முன்­பும் என்னைப் பற்றி அவ­தூறு பேசி­யுள்­ளார்­கள். ஆனால் இந்த அளவிற்குக் காயப் படுத்தியது இல்லை," என்­றார் ஒசாகா.