ர‌ஷ்யப் படையெடுப்பின் கோரமுகம்: தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி பலி

ர‌ஷ்யப் படையெடுப்பின் கோரமுகம்: தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி பலி

1 mins read
a4a293d6-55a9-43c7-a6bd-a56cebf477b9
காயமடைந்த கர்ப்பிணியை அழைத்துச் சென்ற உக்ரேன் வீரர்கள்.படம்: இணையம் -

சென்ற 10ஆம் தேதி உக்­ரே­னின் துறை­முக நக­ர­மான மரி­ய­போல்­மீது, ர‌ஷ்­யப் படை­கள் ஆக்­ரோ­ஷ­மான தாக்­கு­தலை மேற்­கொண்­டன.

அப்­போது அங்­குள்ள ஒரு மகப்­பேறு மருத்­து­வ­மனை மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இதற்கு உலக நாடு­கள் பல­வும் கண்­ட­னம் தெரி­வித்­தன. இந்த தாக்­கு­த­லில் ஒரு குழந்தை உள்­பட மூவர் பலி­யா­தா­ன­தாக முதல்­கட்­டத் தக­வல்­கள் வெளி­யா­கின.

அப்­போது காய­ம­டைந்த ஒரு கர்ப்­பி­ணியை உக்­ரேன் படை­யி­னர் அழைத்­துச் சென்ற புகைப்­ப­டம் இணை­யத்­தில் வேக­மாக பர­வி­யது.

அந்த கர்ப்­பிணி சிகிச்சை பல­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார். கர்ப்­பி­ணி­யின் வயிற்­றில் இருந்த சிசுவும்­உயி­ரி­ழந்­து­விட்­ட­து.

மரிய­போலில் தாக்­கு­தலில் இதுவரை 2,187 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க தக­வல்­கள் தெரி­விக்­கின்­

றன.