தண்ணீருக்கு அல்லல்படும் மியன்மார் மக்கள்

தண்ணீருக்கு அல்லல்படும் மியன்மார் மக்கள்

1 mins read
6518576a-dc57-4e55-9818-980b0aa97a18
-

யங்­கூன்: மியன்­மா­ரில் சென்ற ஆண்டு நடத்த ராணு­வப் புரட்­சி­யைத் தொடர்ந்து, அந்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம் பெரி­தும் சரி­வ­டைந்­தது. அதனை மேலும் மோச­மாக்­கும் வகை­யில், அங்கு மின்­வெட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதற்கு எரி­வாயு விலை உயர்வு, ராணுவ ஆட்­சிக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் தாக்­கு­தல்­க­ளே கார­ணம் என்றது ஆட்­சிக் குழு.

யங்­கூன் மக்­கள் இப்­போது தண்­ணீ­ருக்­காக நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

"கரித்­துண்­டு­க­ளைக் கொண்டு சமைத்­து­வி­டு­வோம், ஆனால் தண்­ணீர் இல்­லா­மல் எது­வும் செய்­ய­முடி­யாது," என்­றார் குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர்.

"கோடை­கா­லத்­தில் மின்­வெட்­டும் தண்­ணீர் பிரச்­சி­னை­யும் வழக்க மான­து­தான். ஆனால், இந்த ஆண்டு மிக­வும் மோச­மாக உள்­ளது," என்­றார் தண்­ணீர் விநி­யோக அமைப்பு ஒன்­றின் தலை­வர்.

ராணுவ ஆட்­சியைப் புறக்­க­ணிக்­கும் வகை­யில், மின்­சார கட்­ட­ணம் செலுத்­த­வில்லை என்­றால், மக்­கள் மின்­வெட்டை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று மின்வாரியம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.