அமெரிக்காவின் தடைகளை தவிர்க்க சீனா விருப்பம்

1 mins read
7866bf85-4bdc-450b-a741-9251f61839ef
உக்ரேன்-போலந்து எல்லையிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உக்ேரனிய குடும்பங்கள். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: ரஷ்ய போர் தொடர்­பாக அமெ­ரிக்கா விதித்­தி­ருக்­கும் தடை­

க­ளின் தாக்­கத்தை தவிர்க்க விரும்­பு­வ­தாக சீனா தெரி­வித்­துள்­ளது. "சீனா நெருக்­கடி தரும் நாடு கிடை­யாது. அதே­போல தடை­கள் தன்­னைப் பாதிப்­பதை சீனா விரும்­பாது," என்று சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி தெரி­வித்­துள்­ளார். ஸ்ெபயின் வெளி­யு­றவு அமைச்­சர் ஜோஸ் மேனு­வ­லி­டம் திங்­கட்­கி­ழமை தொலை­பேசி வாயி­லாக அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

உக்ேரன் பேர் நில­வ­ரம் குறித்து இரு­வ­ரும் விவா­தித்­த­போது பேசிய திரு வாங், தனது சட்ட உரி­மை­

க­ளைப் பாது­காக்க சீனா­வுக்­குத் தெரி­யும் என்­றும் அது அதன் உரிமை என்­றும் கூறி­னார்.

இதற்­கி­டையே, ரஷ்யா படை­யெ­டுக்­கத் தொடங்­கி­யதுமுதல் 1.4 மில்­லி­யன் குழந்­தை­கள் உக்­ரே­னி­லி­ருந்து ெவளி­யேறி இருப்­ப­தாக ஐக்­கிய நாடு­கள் மன்­றம் தெரி­வித்துள்­ளது.

அதன்­படி, ஒரு வினா­டிக்கு கிட்­டத்­தட்ட ஒரு குழந்தை அக­தி­யாக மாறி­வ­ரு­வதை இந்த நில­வ­ரம் உணர்த்­து­வ­தா­க­வும் அது குறிப்­பிட்­டது. "சரா­ச­ரி­யாக தினமும் 70,000 குழந்­தை­கள் உக்­ரே­னி­லி­ருந்து அக­தி­யாக வெளியேறுகின்ற­னர்," என ஐநா குழந்­தை­கள் அமைப்பான யுனி­செ­ஃப்­பின் பேச்­சா­ளர் ஜேம்ஸ் எல்­டர் ஜெனி­வா­வில் தெரி­வித்­தார். "இதனை நிமி டத்திற்கு 55 குழந்­தை­கள் அல்லது வினா­டிக்கு ஒரு குழந்தை என­கணக்கிடலாம்," என்­றார் அவர்.