லண்டன்: பிரிட்டன் நாளை மறுதினம் (மார்ச் 18) முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்துகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி பயணிகள் தடமறியும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
அதேபோல அவர்கள் பரிசோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் ஏற்
படாது என போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் ஷேப்ஸ் தெரிவித்தார். பயணம் தொடர்பான எல்லா வகையான கட்டுப்பாடுகளும் மார்ச் 18 அதிகாலை 4 மணி முதல் (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 12 மணி) தளர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தளர்வுகளை பிரிட்டன் அறிவித்துள்ள அதேநேரம் ஐரோப்பாவின் பல பகுதிகளில், குறிப்பாக, ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து போன்றவற்றில் கிருமிப் பரவல் வேகமெடுத்துள்ளதாக புளும்பெர்க் செய்தி கூறுகிறது. ஓமிக்ரான் வகையைச் சேர்ந்த பிஏ.2 என்னும் கிருமி இந்த நாடுகளில் உச்சம் அடைந் திருப்பதாக அது தெரிவித்தது.

