புத்ராஜெயா: தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் (விடிஎல்) திட்டத்தின்கீழ் விமானப் பயணங்களை மேற்கொள்ள சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரேமாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் என மலேசியா அறிவித்துள்ளது.
'பரிசோதனைக்குப் பின்னர் பயணிகளை அனுப்பலாம்' என்னும் நடைமுறை இதற்குப் பயன்படுத்தப்
படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று கூறினார். அதாவது, மலேசியாவில் வந்திறங்கும் இந்த மூன்று நாடு
களைச் சேர்ந்தோர் கொவிட்-19 பரிசோதனை முடிவு வரும்வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பரிசோதனைக்குப் பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு தனியார் போக்குவரத்து, டாக்சி அல்லது வாடகை வாகனம் மூலம் செல்லலாம்.
பரிசோதனை முடிவு 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும். அதுவரை பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் வீ.

