முடக்கம்: சீனாவில் 30 மில்லியன் மக்கள் பாதிப்பு

முடக்கம்: சீனாவில் 30 மில்லியன் மக்கள் பாதிப்பு

2 mins read
42018160-c58e-4033-afe8-04330ccc2cbe
மருத்துவக் கவச உடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று ஷங்காய் நகரில் முடக்கநிலை கட்டுப்பாடுகளைக் கண்காணித்தனர். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: சீனா­வில் கொவிட்-19 தொற்று மீண்­டும் தலை­தூக்கி வேக­மா­கப் பரவி வரு­வ­தன் கார­ண­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள முடக்கநிலை­யால் கிட்­டத்­தட்ட 30 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அன்­றாட கிரு­மித்தொற்று எண்­ணிக்கை நேற்று தொடர்ந்து ஆறா­வது நாளாக 1,000க்கு மேல் பதி­வா­னது.

நாடு முழு­வ­தும் ஓமிக்­ரான் வகை கிருமி வேக­மா­கப் பர­வு­கிறது. மொத்­தம் 5,280 பேருக்கு நேற்று கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இது திங்­கட்­கி­ழ­மை­யைக் காட்­டி­லும் இரு­ம­டங்கு. தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நேற்று குறைந்­த­பட்­சம் 13 நக­ரங்­களில் முழு­மை­யான முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் சில நக­ரங்­கள் குறிப்­பிட்ட சில நேரங்­க­ளுக்கு முடக்கி வைக்­கப்­பட்­டன. வட­கி­ழக்கு ஜிலின் மாநி­லம்­தான் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று மட்­டும் அந்த மாநி­லத்­தில் 3,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக தேசிய சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது.

மாநி­லத் தலை­ந­கர் சோங்­சுன் உள்­ளிட்ட பல நக­ரங்­க­ளின் குடி­யி­ருப்­பா­ளர்­கள் நேற்று வீட்­டுக்­குள்­ளேயே முடங்கி இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

சீனா­வின் ஆகப் ெபரிய நகராd ஷங்­காய் கடு­மை­யான கட்­டுப் பாடு­க­ளுக்­குள் வைக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட சில கட்­ட­டங்­கள் யாரும் செல்­லாத வகை­யில் மூடப்­பட்­டுள்­ளன. தென்­சீ­னா­வின் தொழில் நக­ரான ஷென்­ஸெ­னில் வசிக்­கும் 17.5 மில்­லி­யன் மக்­களும் மூன்று நாள் முடக்­கத்­தில் சிக்கி உள்­ள­னர். அங்­குள்ள தொழிற்­

சா­லை­கள் மூடப்­பட்டு வெறிச்­சோடி காணப்­ப­ட்டன.

இதற்கிடையே, லாரி ஓட்டுநர் களுக்கு கிருமிப் பரிசோதனைக் கட்டுப்பாடு காரணமாக சீனா முழுவதும் லாரி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருள் விநியோகம் தாமதடைந்து வருகிறது. கப்பல் களுக்கு சரக்கு அனுப்பப்படுவதும் பாதிப்படைந்துள்ளது.