ஜோகூர் முதலமைச்சர் நியமனத்தில் வியப்பு

ஜோகூர் முதலமைச்சர் நியமனத்தில் வியப்பு

2 mins read
0d761afc-0c8a-4c05-aa89-4a00f822bda1
முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஒன் ஹஃபிஸ் காஸி, 43. படம்: த ஸ்டார் -

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத் தின் 19வது முத­ல­மைச்­ச­ராக ஒன் ஹஃபிஸ் காஸியை ஜோகூர் சுல்­தான் நிய­மித்துள்­ளார்.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­னணி வெற்றி பெற்­றது. மொத்­த­முள்ள 56 தொகு­தி­களில் 40ஐ கைப்­பற்றி அது அறு­திப் பெரும்­பான்மை பெற்­றது.

அத­னைத் தொடர்ந்து முத­ல­மைச்­ச­ரின் நிய­ம­னம் எதிர்­பார்ப்பை உரு­வாக்கி இருந்­தது.

சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வென்­றால் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஹஸ்னி முகம்­மது மீண்­டும் அந்­தப் பத­வி­யில் அமர்த்­தப்­ப­டு­வார் என தேசிய முன்­னணி பிர­சா­ரம் செய்­து வந்தது.

ஆனால், ஒன் ஹஃபிஸ் காஸியை ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர் நிய­மித்­தார். தொடர்ந்து, நேற்று மாலையே அவர் சுல்­தான் முன்­னி­லை­யில் பதவி ஏற்­றுக்­கொண்­டார்.

43 வய­தான திரு ஒன், அம்னோ நிறு­வ­ன­ரும் ஜோகூர் மாநிலத்தின் ஏழா­வது முத­ல­மைச்­ச­ரு­மான ஒன் ஜாஃப­ரின் கொள்­ளுப்பேரன் ஆவார். சனிக்­கி­ழமை நடை­பெற்­றத் தேர்­த­லில் மாச்­சாப் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் 6,543 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்­றார்.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் பக்­கத்­தான் ஹரப்­பான் வென்­ற­தைத் தொடர்ந்து ஜோகூர் மாநில முத­ல­மைச்­சர் பதவி முதல்முறை­யாக அம்­னோ­வி­ட­மி­ருந்து நழு­விச் சென்­றது. அம்னோ உரு­வான மாநி­லம் ஜோகூர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்போது நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 13 இடங்களில் மட்டுமே வென்றது.

இதற்கிடையே, முன்னாள் எதிர்த்தரப்பு பிரபலம் ரஃபிஸி ரம்லி, 44, மீண்டும் அரசியலுக்குத் திரும்பி உள்ளார், ஜோகூர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அவரது அரசியல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிகேஆர் கட்சியையும் அது இடம் பெற்றுள்ள பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியையும் வலுவுடன் தயார்ப் படுத்த தாம் அரசியலுக்குத் திரும்பி உள்ளதாக ரஃபிஸி கூறினார்.