பேச்சுவார்த்தை ஒருபக்கம், சண்டை மறுபக்கம்

பேச்சுவார்த்தை ஒருபக்கம், சண்டை மறுபக்கம்

2 mins read
5fef8cd7-5fc6-42d0-8788-37f0a9174c82
கியவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பில் இருந்து சிறுவனுடன் வெளியேறிய பெண். படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: உக்­ரே­னுக்­கும் ர‌ஷ்­யா­வுக்­கும் இடையே நடத்­தப்­பட்­டு­வ­ரும் பேச்­சு­வார்த்தை முன்­னேற்­றம் கண்­டுள்­ள­தாக ர‌ஷ்யா தெரி­வித்து உள்ளது.

உக்­ரேன், நடு­நி­லை­யைக் கடைப் பிடிப்­பது குறித்து பேச இணங்­கி­உள்­ள­தைத் தொடர்ந்து, அமைதி உடன்­பாட்­டில் சில அம்­சங்­களை ர‌ஷ்யா ஏற்­றுக்­கொள்­ளும் சாத்­தி­யம் இருப்­ப­தாக ர‌ஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத­னால், இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு ஐரோப்­பா­வில் நடந்­து­வ­ரும் ஆகப்­பெ­ரிய போர் கூடிய விரை­வில் முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேட்டோ அமைப்­பில் உக்­ரேன் சேரக்­கூ­டாது என்­றும் அது நடு­நிலையை கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்­றும் ர‌ஷ்யா வலி­யு­றுத்­து­கிறது.

இந்­நி­லை­யில் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வர பேச்­சு வார்த்தையை தொடர தயா­ராக இருப்­ப­தாக உக்­ரேன் கூறி­யுள்­ளது. ஆனால் ர‌ஷ்­யா­வின் அனைத்து நிபந்­த­னை­க­ளுக்­கும் அது கட்­டுப்­படாது என­வும் சர­ண­டை­யாது என­வும் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யப் படை­களுக்கு எதி­ராக உக்­ரே­னிய ஆயு­தப் படை­யி­னர் பல பகு­தி­களில் கடு­மை­யான எதிர்­தாக்­கு­தல்­களை நடத்தி வரு­வ­தாக உக்­ரே­னிய அதி­ப­ரின் ஆலோ­ச­கர் மைக்­கைலோ பொடோ­லி­யாக் கூறி­யுள்­ளார்.

ஆனால், எந்­தப் பகு­தி­யில் சண்டை தீவி­ர­மாக உள்­ளது என்­பது பற்­றிய விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை.

போர் கார­ண­மாக உய­ரி­ழப்­போர் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் கூறி­னர். கார்­கிவ் நக­ரில் மட்­டும் 500 பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் இது­வரை 103 பிள்­ளை­கள் மாண்­டு­விட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இப்­போர் அடுத்த ஆண்­டிற்­கும் நீடித்­தால், உக்­ரே­னில் 10ல் ஒன்­பது பேர் வறு­மைக்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள் என்று ஐநா மேம்­பாட்டு திட்ட அமைப்பு கூறி­யுள்­ளது.

அத்­து­டன் கடந்த 20 ஆண்­டு­களில் ஏற்­பட்ட பொரு­ள­தார வளர்ச்­சியை அது முற்­றி­லும் துடைத்­தொழித்­து­வி­டும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில் ஒவ்­வொரு நொடி­யும் கிட்­டத்­தட்ட ஒரு பிள்ளை அக­தி­யா­வ­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது.

பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரேன் மீது ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு தொடங்­கி­யது முதல், கிட்­டத்­தட்ட 1.4 மில்­லி­யன் சிறார்­கள் உக்­ரேனை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.

மேலும் பொரு­ளி­யல் மெது­வடை­வ­தா­லும் பண­வீக்­கத்­தா­லும் உல­கப் பொரு­ளி­யல் பாதிப்­ப­டை­யும் என்று அனைத்­து­லக பண நிதி­யம் தெரி­வித்­தது.