கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும்

கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக குறைந்துவந்த தொற்று எண்ணிக்கை, கடந்த வாரம் எட்டு விழுக்காடு உயர்ந்ததாக அமைப்பு தெரிவித்தது. சென்ற வாரம் 11 மில்லியன் சம்பவங்களும், தொற்றுப் பாதிப்பால் 43,000 மரணங்களும் பதிவாகின.

சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட மேற்கு பசிபிக் வட்டாரத்தில் சென்ற வாரம் புதிய தொற்றுச் சம்பவங்கள் 29 விழுக்காடு உயர்ந்தன. சென்ற டிசம்பரிலிருந்து இந்த வட்டாரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது இந்த வட்டாரத்தில் 5.02 மில்லியன் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒப்புநோக்க தொற்றிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் தற்போது 4.99 மில்லியன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பதிவுசெய்யப்படாத இன்னும் அதிகமான சம்பவங்கள் இருக்கக்கூடும் என அமைப்பு நம்புகிறது. அதனால் இந்நிலைமை மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கலாம் என உலக சுகாதார அமைப்பு தலைவர் எச்சரித்தார். சம்பவங்கள் அதிகரிக்க, மரணங்களும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.

தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், நாடுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.







 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!