கட்சித் தேர்தலை தள்ளிவைக்க அம்னோ திட்டம்

கட்சித் தேர்தலை தள்ளிவைக்க அம்னோ திட்டம்

1 mins read
19925999-1ba6-488c-bc2b-ba30eb6dc637
-

கோலா­லம்­பூர்: மலே­சிய ஆளும் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கும் அம்னோ, அதன் கட்­சித் தேர்­தல் குறித்த சட்­டத்­திட்­டங்­களை மாற்றி­ அமைக்கிறது.

அம்­னோ­வின் தற்­போ­தைய தலை­வர் அக­மது ஸாஹித் ஹமி­டி­யின் பத­வி­யைக் காப்­பாற்­றும் நோக்­கி­லும் கட்­சி­யின் துணைத் தலை­வ­ராக உள்ள மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், கட்­சி­யின் தலை­வ­ரா­வ­தைத் தடுக்­கும் வகை­யிலும் இந்த மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

அம்­னோ­வில் கட்­சித் தலை­வ­ராக இல்­லாத ஒரு­வர் மலே­சி­யா­வின் பிர­த­ம­ராக இருப்­பது இதுவே முதல்­முறை. கட்­சித் தலை­வர் பத­வி­யைக் கைப்­பற்­று­வ­தற்கு இந்­தக் கட்­சித் தேர்­தல் அவ­ருக்கு நல்ல வாய்ப்­பாக இருந்­தி­ருக்­கும்.

அம்­னோ­வின் இளை­யர் பிரி­வும் பெண்­கள் பிரி­வும் இந்த மாற்­றத்தை பரிந்­து­ரைத்­துள்­ளன. இதன்­படி, ஒவ்­வொரு பொதுத் தேர்­த­லுக்­குப் பிற­கும் கட்­சித் தேர்­தலை நடத்த இது வழி­வ­குக்­கும்.

"பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு கட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாங்­கள் பரிந்­து­ரைக்­கி­றோம். இத­னால் கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்­தும் முயற்­சி­கள் தவிர்க்­கப்­படும்," என்­றார் அம்னோ இளை­யர் பிரிவு தலை­வர் அஷ்­ரஃப் வாஜ்டி டுசுகி.

தற்­போது, அம்னோ கட்­சித் தேர்­தல் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கிறது.

ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடக்­கும் மலே­சி­யப் பொதுத் தேர்­தல் அடுத்த ஆண்டு மத்­தி­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஸாஹித்­தின் மூன்­றாண்டு பத­விக் காலம், கடந்த ஆண்டு முடி­வ­டைந்­ததை அடுத்து கட்­சித் தேர்­தலை நடத்த இவ்­வாண்டு இறுதி வரை அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மலே­சி­யப் பொதுத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த அம்னோ நெருக்­கடி கொடுக்­கக்­கூ­டும்.