அறவே தொற்று இல்லா உத்தி தொடர்ந்து பின்பற்றப்படும் என்கிறார் சீன அதிபர் ஸி

அறவே தொற்று இல்லா உத்தி தொடர்ந்து பின்பற்றப்படும் என்கிறார் சீன அதிபர் ஸி

1 mins read
f18d194b-adea-4ba7-b8d7-c05f8422b225
-

பெய்­ஜிங்: சீன அதி­பர் ஸி ஜின்­பிங், நாட்­டில் அறவே தொற்று இல்லாத கொள்கையைத் தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

இரண்டு நாள்­க­ளுக்கு முன்பு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் வழி­காட்­டி­களை தேசிய சுகா­தார மன்­றம் வெளி­யிட்­டது.

இந்த நிலை­யில் அதி­பர் ஸி, நாட்­டின் உயர் மட்ட தலை­வர்­கள் இடையே உரையாற்றினார்.

அப்­போது மக்­க­ளுக்­கும் அவர் ­க­ளு­டைய வாழ்க்­கைக்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

நாட்­டில் தொற்று பர­வு­வதை கூடி­ய­வி­ரை­வில் தடுத்து நிறுத்தி யாக வேண்­டும் என்­று அவர் கூறினார். திரு ஸியின் உரையை அர­சாங்க தொலைக்­காட்­சி­யான சிசி­டிவி நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பி­யது.

செவ்­வாய்க்கிழமை இரவு தேசிய சுகா­தார மன்­றம், அதன் இணையத் த­ளத்­தில் ஒரு புதிய ஆவ­ணத்தை பதி­வேற்­றி­யது. கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றிந்து சிகிச்சை அளிக்­கும் திட்­டம் என்று அந்த ஆவ­ணத்­துக்­குப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. இது, 1.4 பில்­லி­யன் மக்­கள்­தொகையைக் கொண்ட நாட்­டின் கொவிட்-19 கொள்­கையை மாற்றி அ­மைக்­கும் ஒன்­ப­தா­வது திருத்­தப்­பட்ட ஆவ­ண­மா­கும். மிதமான அறிகுறிகள் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டியதில்லை. இதற்குப் பதிலாக மத்திய தனிமைப்படுத்தும் இடங்களுக்கு நோயாளிகள் செல்ல லாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுகாதாரத் துறை நெருக்கடிக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதிகமானவர்கள் மித மான அறிகுறிகளால் பாதிக்கப் படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.