மியாமி: புளோரிடாவில் பொதுப் பேருந்தில் பயணம் செய்த ஒருவர், சரமாரியாகச் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகலில் புளோரிடா நகர காவல்துறை தலைமையகத்துக்கு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு பேருந்தை காவல்துறை தலைமையகத்துக்கு ஓட்டிச்சென்றார்.
இதையடுத்து துப்பாக்கிக்காரன் சரண் அடைந்தான். காயம் அடைந்தவர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறையினர் டுவிட்டர் பதிவில் தெரிவித்தனர்.
ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஃபோர்ட் லாடெர்லிடேலில் உள்ள புரோவார்ட் சுகாதார மருத்துவ நிலைய பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
துப்பாக்கியால் சுட்டவனின் நோக்கம் பற்றி தெரியவில்லை.
சந்தேக நபர் சுடத் தொடங்கியதும் புரோவர்ட் பொதுப்பேருந்து ஓட்டுநர் உடனடியாக அருகில் இருந்த காவல் தலைமையகத்துக்கு பேருந்தை திருப்பினார். அப்போது வழியை மறித்துக் கொண்டிருந்த காரையும் அவர் இடித்துச் சென்றார் என்று ஃபோர்ட் லாடெர்டேல் காவல் பிரிவின் தற்காலிகத் தலைவர் லூயிஸ் ஆல்வாரெஸ் தெரிவித்தார். ஓட்டுநர் காயம் அடையவில்லை. மூன்று பயணிகளுக்கு லேசான சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிக்காரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

