போடோ: நார்வே நாட்டின் போடோ நகரின் தெற்குப் பகுதியில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது விபத்துக்குள்ளானது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் நால்வர் உயிரிழந்தனர்.
இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலை யில், மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

