சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஒரே வாரத்தில் 37% அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் ஓமிக்ரானின் துணை திரிபான ஓமிக்ரான் பிஏ.2வோடு தொடர்புடைவை.
இது ஏற்கெனவே உள்ள ஓமிக்ரானைவிட வேகமாகப் பரவக்கூடியது என கருதப்படுவதால், வரும் நாள்களில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருமளவு உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
சென்ற வாரம் 295,146 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தில் 215,701ஆக இருந்தது.
நேற்று 46,422 பேரைக் கிருமி தொற்றியது. அத்துடன் நியூ சவுத் வேல்சில் 12 பேர், குயின்ஸ்லாந்தில் 10 பேர் உட்பட 24 பேர் மாண்டு விட்டனர்.
நியூ சவுத் வேல்சில் 825 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, அம்மாநில அதிகாரிகள், செப்டம்பர் மாதம் வரை முடக்கநிலையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
அதுபோல் மெல்பர்னின் விக்டோரியா மாநிலத்திலும் முடக்க உத்தரவு நேற்று நீட்டிக்கப்பட்டது. எனவே, மக்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

