அச்சிடும் தாளுக்கு தட்டுப்பாடு; இலங்கையில் தேர்வுகள் ரத்து

அச்சிடும் தாளுக்கு தட்டுப்பாடு; இலங்கையில் தேர்வுகள் ரத்து

1 mins read
275ded9b-b7b9-47ce-8f43-939028348299
-

கொழும்பு: இலங்­கை­யில் இறக்­கு­மதிக்­குத் தேவை­யான டாலர் கையி­ருப்பு இல்­லாத நிலை­யில், அச்­சி­டு­வ­தற்­கான தாளுக்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாடு கார­ண­மாக பள்ளி மாண­வர்­க­ளின் தவ­ணைத் தேர்வு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

1948ல் சுதந்­தி­ர­ம­டைந்த பிறகு, ஆக மோச­மான நிதி நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­கிறது இலங்கை.

வரும் திங்­கட்­கி­ழமை தொடங்­க­வி­ருந்த தவணை தேர்­வு­கள் மறு­தேதி குறிப்­பி­டப்­ப­டா­மல் ஒத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக கல்வித் துறை அதி­கா­ரி­கள் நேற்று சொன்­னர்.

"தாள், மையை வாங்­கு­வ­தற்­குத் தேவை­யான, வெளி­நாட்டு நாண­யத்தை அச்­சி­டு­ப­வர்­க­ளால் பெற முடி­யாத கார­ணத்­தால், பள்­ளி­த் தேர்­வு­களை நடத்­த­மு­டி­யவில்லை," என்று மேற்கு மாநில கல்­வித் துறை தெரி­வித்­தது. இத­னால் அந்­நாட்­டின் 4.5 மில்­லி­யன் மாண­வர்­களில் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் பாதிக்­கப்­ப­டு­வர் என்று அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

விலை­வாசி உயர்­வால், இலங்­கை­யில் உண­வுப் பொருள், சமை­யல் எரி­வாயு, எரி­பொ­ருள் உள்ளிட்ட பொருள்­க­ளுக்­கும் பெரும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது.