மணிலா: உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகளவில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எரிசக்தியைப் பாதுகாக்க வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிலிப்பீன்ஸ் பரிசீலித்து வருகிறது.
கிடுகிடுவென உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தைத் தணிப்பதற்கான வழிகளை பிலிப்பீன்ஸ் ஆராய்ந்து வருகிறது. இதில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ஓட்டுநர்களுக்கான உதவி ஆகியவையும் அடங்கும்.
"நான்கு நாள் நடைமுறை கொண்டு வரப்பட்டாலும், ஊழியர்கள் வாரத்திற்கு 40 மணி நேர வேலை செய்வார்கள்.
"நாளொன்றுக்கு 10 மணி நேரம் என வாரத்தில் நான்கு நாள்களுக்கு அவர்கள் வேலை செய்வார்கள்," என்றார் சமூக பொருளியல் திட்ட செயலாளர் கர்ல் கென்ட்ரிக் சுவா.
வளைகுடா போர் ஏற்பட்ட காலத்தில், எண்ணெய் விலை உயர்ந்தபோதும் பிலிப்பீன்ஸ் இதே நடைமுறையைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

