சீனாவில் ஓராண்டுக்குப் பிறகு கொவிட்-19 மரணங்கள் 

சீனாவில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால் இருவர் மாண்டனர். இது ஜனவரி 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொற்றுப் பாதிப்பால் பதிவான முதல் உயிரிழப்புகள்.

சென்றாண்டு முழுவதும் இரண்டே தொற்று மரணங்கள் பதிவுசெய்யப்பட்டன.

வட-கிழக்கு மாநிலமான ஜிலினின் மரணங்கள் ஏற்பட்டன. வட கொரியா, ர‌ஷ்யா ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஜிலின் மாநிலத்தில் ஆக அதிக அளவில் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாடளவில் ஓமிக்ரான் அலை வேகமாகப் பரவிவருகிறது. வெள்ளிக்கிழமை (மார்ச் 18) நிலவரப்படி 2,228 புதிய சம்பங்கள் உறுதிசெய்யப்பட்டன. மொத்தம் 128,462 சம்பவங்கள் பதிவாகின.

சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் முக்கால்வாசி பேர் கூடுதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!