பெய்ஜிங்: ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் கொடூரமானவை என்று சீனா கூறிஉள்ளது.
நேட்டோ குறித்த மாஸ்கோவின் கருத்தை ஒப்புக்கொண்ட சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் லீ யுச்செங், கிழக்கு நோக்கி நேட்டோ தனது கூட்டமைப்பை விரிவுபடுத்தக்கூடாது என்றார்.
உக்ரேன் போர் குறித்து சீனா கவலை தெரிவித்திருந்தாலும் அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அது இன்னமும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளியல் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா, ஐநா பாதுகாப்பு மன்றம் அதற்கு அங்கீகாரம் அளிக்காத நிலையில், அவை ஒருதலைபட்சமானது என்றும் சொன்னது.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருப்பதாகவும் அவர் சொன்னார்.
"தடைகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
"தடைகள் காரணமாக சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். உலகப் பொருளியல் மோசமடையும்," என்றார் அவர்.
இதற்கிடையே, உக்ரேனும் ரஷ்யாவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, உடன்பாட்டை நெருங்குவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அடைந்த முன்னேற்றங்களில் இருந்து இரு நாடுகளும் பின்வாங்கவில்லை என்றால், போர் விரைவில் முடிவடையும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.
ரஷ்ய, உக்ரேன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் இம்மாதம் சந்தித்தனர். அப்போது துருக்கி வெளியுறவு அமைச்சரும் உடன் இருந்தார்.

