உக்ரேனில் நடக்கும் போரினால் ஏற்பட்டுள்ள எண்ணெய், விவசாய பொருள்களின் விலையேற்றம், உலகெங்கிலும் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரியில் உலகளாவிய உணவு விலை இதுவரையில்லாத அளவுக்கு அதிகரித்தது. அது, கடந்த ஆண்டு இதே காலகட்டத் தில் இருந்ததைவிட 24% உயர்ந்து உள்ளது.
கோதுமையின் விலை மட்டும் 50% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தோனீசியாவிற்குச் சென்று சேரவேண்டிய 160 டன் கோதுமை இதுவரை உக்ரேனில் மாட்டிக்கொண்டுள்ளதாக சொன்னார் இந்தோனீசிய கோதுமை மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ரத்னா லோப்பிஸ். எனவே, கோதுமை இறக்குமதிக்கு மாற்று ஏற்பாட்டுக்கான வழி வகைகளை ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
பிலிப்பீன்சிலும் இதே நிலைமைதான். ஆனால், ரஷ்யா, உக்ரேனுடனான பொருளாதார தொடர்புகள் குறைவு என்பதால், நேரடி வர்த்தகத்தில் பெரியளவிலான பாதிப்புகள் இல்லை.
ரஷ்யா-உக்ரேன் மோதல் காரணமாக உரங்கள், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மலேசியாவின் உணவுப் பாதுகாப்பு மறைமுகமாக பாதிக்கப்படுவதற்கு வழி வகுத்துள்ளது.

