ஆதரவு விலக்கப்படும்: மலேசிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

ஆதரவு விலக்கப்படும்: மலேசிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

1 mins read
93b67329-fec4-4f99-aa99-c03306cd950a
-

கோலா­லம்­பூர்: கட்­சித் தாவல் தடுப்பு சட்ட மசோதா குறிப்­பிட்ட காலவரை­ய­றைக்­குள் மக்­க­ள­வை­யில் தாக்­கல் செய்­யப்­ப­டா­விட்­டால், மலே­சிய அர­சாங்­கத்­து­டன் எதிர்க்­கட்­சி­கள் செய்­து­கொண்ட கருத்­தி­ணக்க உடன்­பாடு ரத்து செய்­யப்­படும் என ஜனநாயக செயல் கட்­சி­யின் லிம் குவான் எங் எச்­ச­ரித்­துள்­ளார்.

இது, மலே­சி­யப் பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்­து­வ­தற்கு ஏது­வாக, தற்­போ­தைய நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்­ப­தற்கு வழி­வகுக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

"கட்­சித் தாவல், நாட்­டில் ஜன­நா­யக நடை­மு­றையை முழு­மை­யாக சீரழித்­தி­ருக்­கிறது. எனவே அந்த சட்ட மசோதா நிறை­வேற்­றப்­பட வேண்டு­மென அர­சாங் கத்தை பக்­கத்தான் ஹரப்­பான் வலி­யு­றுத்தி இருப்­ப­தாக," லிம் குவான் எங் தெரி­வித்­தார்.

சட்ட விவ­கார அமைச்­சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார், கட்­சித் தாவல் தடுப்பு சட்­ட­மசோதா மக்­க­ள­வை­யில் ஏற்­றுக் கொள்­ளப்­பட மேலும் விரி­வான ஆய்வு தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

இதற்­கி­டையே, நேற்று நடை­பெற்ற அக்கட்­சித் தேர்­த­லில், புதிய தலைமை செய­லா­ள­ராக ஆண்டனி லோக் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பொதுத் தேர்­தலை எதிர்­கொள்ள புதிய தலை­மைக்கு வழி­விட, லிம் குவான் எங் அப்­ப­த­வி­யில் இருந்து வில­கி­ய­தைத் தொடர்ந்து, இத்தேர்தல் நடத்தப்பட்டது.