மிடல்ஸ்பரோ: செல்சி காற்பந்துக் குழுவை விற்கப் போவதாக அதன் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் அறிவித்த பிறகு, செல்சி ஆறு தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. நேற்று நடந்த எஃப்ஏ கிண்ணப் போட்டி ஒன்றில் மிடல்ஸ்பரோவை வீழ்த்தியதே செல்சியின் அண்மைய வெற்றியாகும்.
மேன்யூ, டோட்டன்ஹம் என முன்னணி குழுக்களை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மிடல்ஸ்பரோ, செல்சியையும் வீழ்த்திவிடாலம் என்று நம்பியது. ஆனால், லுக்காகுவின் 15வது நிமிட கோல் அந்நம்பிக்கையை குலைத்தது. 31வது நிமிடத்தில் விழுந்த செல்சி யின் இன்னொரு கோல் எதிரணியை சிதறடித்தது. பிற்பாதி ஆட்டத்தில் எவ்வளவோ போராடியும் மிடல்ஸ்பரோவால், கோல் போட முடியவில்லை. எனவே, 0-2 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது செல்சி.

