ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் கடைசி பந்து வரை போராடிய இங்கிலாந்து அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 204 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 196 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த ஷ்ருப்சோல்-சார்லி டீன் இணை, கவனமாக விளையாடி, 9 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
ஏற்கெனவே இந்தியாவை வென்றிருந்தாலும் இனிவரும் ஆட்டங்களில் பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகளை வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

