எரிந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

எரிந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

2 mins read
dd8de413-e44b-4b99-b341-5c834904f25b
சைனா ஈஸ்டர்ன் விமான நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் நேற்று முன்தினம் சீனாவின் குவான்சி நகர மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான இடத்தில், துணை ராணுவப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

விமானப் பயணிகள் மாண்டதை சீன விமான நிறுவனம் உறுதி செய்தது

பெய்­ஜிங்: தெற்கு சீனா­வில் விமான விபத்து நடந்த இடத்­தில் அதன் உடைந்த, எரிந்த பாகங்­களை­யும் விமா­னத்­தில் இருந்­த­வர்­க­ளின் உடை­மை­க­ளை­யும் மீட்பு பணி­யா­ளர்­கள் கண்­ட­றிந்தனர்.

ஆனால், விமா­னத்­தில் பய­ணம் செய்­த­வர்­கள் யாரும் உயி­ரு­டன் இருப்­ப­தற்­கான எந்த அறி­கு­றி­யும் தென்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், விமா­னத்­தில் பய­ணம் செய்த அனை­வ­ரும் மாண்டு­விட்­ட­தாக விமான நிறு­வ­னம் உறுதி செய்­துள்­ளது.

132 பேரு­டன் சென்ற சைனா ஈஸ்­டர்­னின் எம்யூ5735 விமா­னம் 30,000 அடி உய­ரத்­தில் பறந்­து­கொண்­டி­ருந்தபோது, குவான்­சி­யில் உள்ள மலைக்­குன்­றில் விபத்­துக்கு உள்­ளா­னது.

போயிங் 737-800 ரக விமா­னம் விபத்­துக்­குள்­ளா­னது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கி­றார்­களா என்­ப­தற்­கான தேடு­தல் நட­வ­டிக்கை முடுக்கி­வி­டப்­பட்­டி­ருந்­தா­லும், யாரும் உயி­ரு­டன் இருப்­ப­தா­கவோ, சட­லம் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவோ எந்­தத் தக­வ­லும் இல்லை.

இதற்­கி­டையே, சீனா­வில் நேற்று பெரும்­பா­லான விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

நேற்று புறப்­ப­ட­வி­ருந்த 11,800 விமா­னங்­களில் 74 விழுக்­காடு ரத்து செய்­யப்­பட்­டன. இவற்­றில் பெரும்­பா­லா­னவை பெய்­ஜிங், ‌ஷாங்­காய் நக­ரங்­க­ளுக்கு இடை­யே­யான விமா­னச் சேவை­க­ளா­கும்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக சீனா­வில் விமா­னச் சேவை­கள் அதி­க­மாக ரத்து செய்­யப்­பட்டு வந்­தா­லும், இவ்­வாண்­டி­லேயே நேற்று தான் ஆக அதி­க­ள­வில் விமா­னங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, இந்­திய சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து தலைமை இயக்­க­கம், நாட்­டில் சேவை­யில் உள்ள போயிங் 737 ரக விமா­னங்­களை 'மேம்­ப­டுத்­தப்­பட்ட கண்­கா­ணிப்­பில்' வைத்­துள்­ளது.

விமா­னப் பயண நடை­மு­றை­களைக் கண்­கா­ணிக்க சிறப்­புக் குழுக்­களை தான் அனுப்­பி­யுள்­ள­தாக இயக்­க­கம் கூறி­யது.