ஷாங்காய்: உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த காற்று தர நிலையை சென்ற ஆண்டில் எந்தவொரு நாடும் எட்டவில்லை என மாசுபாடு தரவு குறித்த ஆய்வு ஒன்று கூறுகிறது. கிட்டத்தட்ட 6,475 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காற்று தூய்மைக்கேட்டின் ஆண்டு சராசரி ஒரு கனமீட்டருக்கு பிஎம்2.5 குறியீடு 5 மைக்ரோகிராமிற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நகரங்களில் வெறும் 3.4% நகரங்கள் மட்டுமே அந்த காற்றுத் தரத்தை எட்டியதாக ஐகியூஏர் எனும் சுவிட்சர்லாந்து நிறுவனம் தெரிவித்தது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க பெருமுயற்சி எடுத்து வரும் சீனா, காற்றின் தரம் மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில், 14வது இடத்தில் இருந்து 22வது இடத்திற்குக் கீழிறங்கியுள்ளது.
இந்தியாவின் பிவாடி, காசியாபாத் ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் சீனாவின் ஹோடன் நகரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

