நரகமான மரியபோல் நகரம்

நரகமான மரியபோல் நகரம்

2 mins read
523a81ff-576e-4a53-a0be-b71a7c6526c4
ர‌ஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தைப் பார்வையிடும் உக்ரேனிய வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

லிவிவ்: உக்­ரேன்-ர‌ஷ்யா போர் தொடங்கி கிட்­டத்­தட்ட ஒரு மாத­மா­கும் நிலை­யில், உக்­ரே­னின் முக்­கிய நக­ரங்­கள் எதை­யும் ர‌ஷ்­யப் படை­க­ளால் கைப்­பற்ற முடி­ய­வில்லை.

இத­னை­ய­டுத்து, நக­ரங்­களை முற்­று­கை­யி­ட­வும் கட்­ட­டங்­களை குண்­டு­வீ­சி­யும் ர‌ஷ்­யப் படை­கள் தாக்­கத் தொடங்­கி­ய­தில் அப்­பாவி மக்­கள் பலர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தத் தாக்­கு­த­லில் உக்­ரே­னின் தெற்கு துறை­முக நக­ர­மான மரி­ய­போல் மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கும் மரி­ய­போல் நக­ரத்தை ர‌ஷ்­யப் படை­கள் சுற்றி வளைத்­தி­ருக்­கின்­றன.

அந்த நக­ரமே கட்­டட இடி­பா­டு­கள், இறந்­தோ­ரின் சட­லங்­கள் என மரி­ய­போல் நக­ரம், நர­கம் போல் காட்­சி­ய­ளிப்­ப­தாக அங்­கி­ருந்து வெளி­யே­றிய மக்­கள் தெரி­வித்­த­னர்.

அந்­ந­க­ரில் ஏறத்­தாழ 3 லட்­சம் பேர் உணவு, குடி­நீர் இன்றி பரி­த­வித்து வரு­கின்­ற­னர். அவர்­கள் நக­ரை­விட்டு வெளி­யேற ரஷ்யா அனு­ம­திக்க வேண்­டும் என்று உக்­ரேன் அரசு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

மரி­ய­போல் நக­ரத்­தில் கிட்­டத்­தட்ட 1,00,000 பேர் 'மனி­த­நே­ய­மற்ற சூழல்­களில்' சிக்­கி­யுள்­ள­தாக உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

பல நகரங்களில் ர‌ஷ்யப் படையினருக்கு எதிராக உக்ரேனிய வீரர்களும் கடும் சண்டையிட்டு வருகின்றனர்.

ர‌ஷ்­யா­வுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் வகையில், அதன்மீது ஜப்­பான் மேலும் பொரு­ளா­தார தடை­க­ளைக் கொண்டு வர­வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்ள ஸெலன்ஸ்கி, ர‌ஷ்­யா­விற்கு எதி­ராக போராட அதி­ந­வீன ஆயுத உதவி வேண்­டு­மென்று மேற்­கத்­திய நாடு­களைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, அவ­ச­ர­மாக கூட்­டப்­பட்­டுள்ள நேட்டோ உச்­சி­மா­நாட்­டில் பங்­கேற்க அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், ஐரோப்பா சென்­றுள்­ளார்.

இச்­சந்­திப்­பிற்கு பிறகு, ர‌ஷ்யா மீது மேலும் பொரு­ளா­தார தடை­கள் கொண்டு வரப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது.

உக்­ரே­னுக்கு அமை­திப்­ப­டையை அனுப்­பு­வ­தாக கூறும் போலந்­தின் திட்­டம் நேட்டோ ராணு­வப் படை­க­ளுக்­கும் ர‌ஷ்­யப் படை­க­ளுக்­கும் இடை­யே­யான நேரடி மோத­லுக்­கான அழைப்பு என்று ர‌ஷ்யா கூறி­உள்­ளது.