விமான விபத்து; மழை காரணமாக தேடும் பணி நிறுத்திவைப்பு

விமான விபத்து; மழை காரணமாக தேடும் பணி நிறுத்திவைப்பு

1 mins read
0b1a53f9-1f37-431c-9b77-496817144da4
விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் செவ்வாய்க்கிழமையன்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: விபத்­துக்­குள்­ளான சைனா ஈஸ்­டர்ன் விமா­னத்­தின் கறுப்புப் பெட்டி ஒன்று கண்­டு­பிடிக்கப்­பட்­டுள்­ள­தாக சீன விமானத் துறை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால், அந்தக் கறுப்புப் மிக மோச­மாகச் சேத­ம­டைந்­துள்­ள­தால் அது தக­வல் அல்­லது குரல் பதிவு பெட்­டியா என்­பதை அறி­யும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சிவில் விமான விபத்து விசா­ரணை மையத்­தின் தலை­வர் மாவோ யான்­ஃபெங் கூறினார்.

போயிங் 737-800 ரக விமா­னம் விபத்­துக்­குள்­ளான கார­ணத்தை அறிய இந்தக் கறுப்­புப் பெட்­டி­யில் பதி­வா­கி­யுள்ள தக­வல்­கள் உத­வக்­கூ­டும்.

132 பேரு­டன் சென்ற விமா­னம், சீனா­வின் குவான்சி பகு­தி­யில் உள்ள மலைக்­குன்­றில் சென்ற திங்­கள்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னது.

விபத்து நடந்த இடத்­தில் இருந்து, விமா­னத்­தின் எரிந்த பாகங்­கள், பய­ணி­க­ளின் உடை­மை­களை மீட்­புப் பணி­யா­ளர்­கள் கண்டு­பி­டித்­த­னர். ஆனால், யாரு­டைய சட­ல­மும் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், மழை கார­ண­மாக தேடு­தல் பணி நேற்று தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

நிலச்­ச­ரிவு ஏற்­படும் ஆபத்து உள்­ள­தா­க­வும் அடர்ந்த காட்­டுப் பகு­தி­யில் அது மீட்பு பணி­யா­ளர்­களை ஆபத்­தில் ஆழ்த்­தக்­கூ­டும் என்று உள்­ளூர் தொலைக்­காட்சி ஒன்று கூறி­யது.

இந்த வாரம் முழு­வ­தும் மழை தொட­ரும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.