ஹாங்காங்கில் மீண்டும் தொடர்பு தடமறிதல்

ஹாங்காங்கில் மீண்டும் தொடர்பு தடமறிதல்

1 mins read
809c7d1f-0b8d-4208-9ce1-271cec90286d
-

லண்­டன்: ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறை­யத் தொடங்­கி­யுள்­ளன. எனவே, அங்கு தொடர்பு தட­ம­றி­தல் நட­வ­டிக்கை மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இது ஹாங்­காங் கிரு­மித்­தொற்றை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்­கும் திட்­டத்­தைக் கைவி­ட­வில்லை என்­ப­தைக் காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து, இந்த நடை­முறை சென்ற பிப்­ர­வரி மாதம் முதல் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

தொற்­றுக்கு ஆளா­ன­வ­ரோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தா­க­வும் எனவே கட்­டா­ய­மாக கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­து­‌கொள்ள வேண்­டு­மென்­றும் நேற்று 10 பேருக்கு நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டது. தற்­பொழுது அதிக தொற்­றுச் சம்­ப­வங்­கள் உள்ள இடங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே இந்த நோட்­டீஸ் அனுப்­பப்­ப­டு­வ­தாக சுகா­தார அதி­கா­ரி­கள் கூறி­னர்.