மலேசியாவில் 'சோஸ்மா' சட்ட நீட்டிப்பு தீர்மானம் தோல்வி

மலேசியாவில் 'சோஸ்மா' சட்ட நீட்டிப்பு தீர்மானம் தோல்வி

2 mins read
f77fd396-7b46-4106-96e9-591912ced6fc
-

கோலா­லம்­பூர்: 'சோஸ்மா' சட்டத்தை மேலும் ஐந்து ஆண்டு ­க­ளுக்கு நீட்­டிக்­கும் தீர்­மா­னம் மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தோல்வி கண்­டது.

இதை­ய­டுத்து, வரும் ஜூலை 31ஆம் தேதிக்­குப் பிறகு இச்­சட்­டம் நடை­மு­றை­யில் இருக்­காது.

சந்­தேகநபர்­களை விசா­ர­ணை­யின்றி 28 நாட்­க­ளுக்கு போலி­சார் தடுத்­து­வைக்க வழி­வ­குக்­கும் இச்­சட்­டத்தை நீட்­டிக்­கும் தீர்­மா­னத்தை உள்­துறை அமைச்­சர் ஹம்சா ஜைனு­தின் முன்­மொ­ழிந்­தார்.

அதன் பின்­னர் நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்­பில் 84 பேர் மட்­டுமே ஆத­ரவு தெரி­வித்­த­னர். 86 பேர் அந்தத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­த­தால் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

தாம­த­மாக சென்ற மூவர் வாக்­க­ளிப்­பில் கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. 50 பேர் வாக்­கெ­டுப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை. மக்­க­ள­வை­யில் மலே­சிய அர­சாங்­கம் பெரும்­பான்மை வாக்­கு­களை இழந்­தது இதுவே முதல் முறை­யா­கும்.

ஜோகூர், மலாக்கா சட்­ட­மன்­றத் தேர்­த­ல்களில் பெற்ற பெரும்­பான்மை வெற்­றி­க­ளைத் தொடர்ந்து, நாடா­ளு­மன்­றத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த அம்னோ அழுத்­தம் கொடுத்து வரும் வேளை­யில், இத்­தீர்­மா­னம் தோல்வி அடைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­யான பக்­கத்­தான் ஹரப்­பா­னு­ட­னான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை ரத்து செய்­யு­மாறு பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பிற்கு அவ­ரது சொந்தக் கட்­சி­யான அம்­னோ­வில் இருந்தே நெருக்­கடி கொடுக்­கப்­ப­டு­கிறது.

ஆனால், தீர்­மா­னம் தோல்வி கண்­ட­தற்கு அரசு ஆத­ரவு உறுப்­பி­னர்­களே கார­ணம் என பக்­கத்­தான் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கும் தேசிய முன்­ன­ணி­யின் தலை­மைச் செய­லா­ளர் ஆன்­டனி லோக் தெரி­வித்­தார்.

"நஜிப் ரசாக், அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிதி உட்­பட அர­சாங்க ஆத­ரவு உறுப்­பி­னர்­கள் 31 பேர் வாக்­கெ­டுப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

"அவர்­களில் குறைந்­தது நான்கு பேர் வந்­தி­ருந்­தால்­கூட அர­சாங்­கத்­தின் தீர்­மா­னம் நிறை­வே­றி­யி­ருக்­கும்.

"அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அந்த தீர்­மா­னத்தை நாங்­கள் ஆத­ரிக்­கத் தவ­றி­ய­தால்­தான் தீர்­மா­னம் தோல்வி கண்­ட­தாக கூறு­வது ஏற்­பு­டை­ய­தல்ல.

"புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை ரத்து செய்ய, அம்னோ சாக்­குத் தேடு­வ­தாக தெரி­கிறது," என்­றும் அவர் சொன்­னார்.