உக்ரேனிய அமைச்சர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்

உக்ரேனிய அமைச்சர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்

2 mins read
a4c4d01e-df9c-4664-b449-1130ba583d4a
ர‌ஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த மின்கம்பத்தையும் கட்டடத்தையும் கடந்து செல்லும் உக்ரேனிய மக்கள்.படம்: ராய்ட்டர்ஸ் -

வார்‌சா: உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்­பிற்­குப் பிறகு, ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் சென்­றுள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நேற்று போலந்து சென்

றார்.

அங்கு அவர், உக்­ரே­னின் வெளி­யு­றவு, தற்­காப்­புத் துறை அமைச்­சர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார். அப்­போது, அத்­து­றை­க­ளின் அமெரிக்க அமைச்­சர்­களும் உட­ன் இருந்­த­னர்.

அமைச்­சர்­க­ளு­ட­னான பைட­னின் சந்­திப்பு ஏறத்­தாழ 40 நிமி­டங்­கள் நீடித்­தது. முன்­ன­தாக, அமைச்­சர்­க­ளி­டையே ஒரு மணி நேர பேச்­சு­வார்த்தை நடந்­தது.

"அர­சி­யல், பாது­காப்பு கோணங்­களில் நடை­மு­றைக்­கேற்ற முடி­வு­களில் கவ­னம் செலுத்­தப்­பட்­ட­தாக," உக்­ரே­னின் டுவிட்­டர் பதிவு கூறியது.

முன்­ன­தாக, நேட்டோ கூட்­ட­மைப்பு, ஜி-7, ஐரோப்­பிய ஒன்­றி­யத் தலை­வர்­க­ளை­யும் பைடன் சந்­தித்­தார்.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யப் படை­கள், பெல­ருஸ் எல்­லைக்கு அரு­கில் உள்ள ஸ்லா­வுட்டி நக­ரத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ள­தாக கியவ் ஆளு­நர் கூறி­யுள்­ளார்.

அந்­ந­க­ரத்­தில் உக்­ரே­னின் செர்­னோ­பில் நக­ரத்­தில் உள்ள அணு­மின் நிலைய ஊழி­யர்­கள் வசிப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

ர‌ஷ்­யப் படை­கள் அந்­ந­க­ரத்­தின் மருத்­து­வ­ம­னை­களை ஆக்­கி­ர­மித்­துள்­ள­தா­க­வும் மேய­ரைக் கடத்­தி­விட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார். ஆனால், ராய்ட்­டர்ஸ் ஊட­கத்­தால் இத்­த­க­வல்­களை உறுதி செய்ய முடி­ய­வில்லை.

உக்­ரே­னில் மருத்­து­வ­ம­னை­கள், சுகா­தார அமைப்­பு­கள் மீதான தாக்­கு­தல்­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தாக உலக சுகா­தார அமைப்­பும் கவலை தெரி­வித்து உள்­ளது.

இந்­நி­லை­யில், ர‌ஷ்ய ராணு­வத்­தளபதி யாகோவ் ரெசான்ஸ்­டெவ், உக்­ரே­னின் கெர்­சான் பகு­தி­யில் கொல்­லப்­பட்­ட­தாக உக்­ரே­னின் தற்­காப்­புத் துறை கூறி­யுள்­ளது.

உக்­ரேன் மீதான ஒரு மாத கால போரில், இது­வரை ர‌ஷ்ய ராணுவ அதி­கா­ரி­கள் ஏழு பேர் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.