வாஷிங்டன்: வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து அந்நாட்டின்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடு நிறுவனத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
வடகொரியா சென்ற வியாழக்கிழமை அதிக சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றைச் சோதித்தது.
இது அமெரிக்கா வரை சென்று தாக்க வல்லது என்று கூறப்படுகிறது.
வடகொரியாவின் இச்செயல்கள் ஆபத்தானது, சினமூட்டுவது என்று கூறும் அமெரிக்கா, ஐநா உறுப்பு நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனையை சிங்கப்பூர் கண்டித்துள்ளது.
வடகொரியா நடத்திய பரிசோ தனை, ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களை மீறிய செயல் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, தனது அறிக்கையில் தெரிவித்தது.

