கல்வி அடிப்படை உரிமை: ஆப்கான் பெண்கள் முழக்கம்

கல்வி அடிப்படை உரிமை: ஆப்கான் பெண்கள் முழக்கம்

1 mins read
4b8db625-2fb3-4b04-8519-9af586418203
பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்கக் கோரி, காபூல் நகர வீதியில் சிறுமிகளும் பெண்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் உயர்­நி­லைப் பள்­ளியை மீண்­டும் திறக்­கக் கோரி 30க்கும் மேற் பட்ட பெண்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலி­பான் அமைப்­பி­னர் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய பிறகு, ஆப்­கா­னிஸ்­தா­னின் உயர்­நி­லைப் பள்ளி மாண­வி­கள் இம்­மா­தம் 23ஆம் தேதி பள்­ளிக்­குத் திரும்­பி­னர். ஆனால், பள்ளி திறக்­கப்­பட்ட ஒரு மணி நேரத்­தி­லேயே மறு தேதி குறிப்­பி­டப்­ப­டா­மல் மீண்­டும் பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டன.

இந்­நி­லை­யில், காபூல் வீதி­யில் ஒன்­று­கூ­டிய பெண்­கள், பள்­ளிக்­கூ­டங்­க­ளைத் திறக்­க­வும்! என்று முழக்­க­மிட்­ட­னர். கல்வி எங்­கள் அடிப்­படை உரிமை, அது ஒன்­றும் அர­சி­யல் திட்­டம் கிடை­யாது என்ற வாச­கங்­கள் பொருந்­திய பதா­கை­க­ளை­யும் அவர்­கள் ஏந்­தி­யி­ருந்­த­னர்.