‌‌ஷாங்காயில் ஆக அதிக தொற்றுச் சம்பவங்கள்

‌‌ஷாங்காயில் ஆக அதிக தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
b744d867-bcdf-4c71-aa3d-213fb8c199cf
-

பெய்­ஜிங்: சீனா­வி­லேயே ஆக அதிக கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் உள்ள மாநி­ல­மாக உரு­வெடுத்­துள்­ளது ‌ஷாங்­காய்.

இதுவரை அந்­நாட்­டின் ஜிலின் மாநி­லமே ஆக அதிக தொற்­றுச் சம்­ப­வங்­கள் உள்ள மாநி­ல­மாக இருந்­தது.

ஆனால், நேற்று ஜிலி­னில் 2,078 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருந்த வேளை­யில், ‌ஷாங்­கா­யில் 2,676 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. ‌ஷாங்­கா­யில் முந்­திய நாளை­விட தொற்­றுச் சம்­ப­வங்­கள் 18 விழுக்­காடு உயர்ந்­துள்­ள­தாக அந்­ந­கர சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது.

‌ஷாங்காயில் பதிவாகும் சம்பவங்களில் பெரும்பாலானவை அறிகுறியற்ற தொற்றுச் சம்பவங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத­னால், பல குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் முடக்­க­நி­லைக்கு ஆளா­கி­யுள்­ளன. தொற்­று அதி­க­ரித்­தா­லும் நக­ரம் முழு­வ­தை­யும் முடக்­கும் திட்­ட­மில்லை என்று அதி­கா­ரி­கள் தொடர்ந்து கூறுகின்றனர்.